இந்தியா
வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக வழக்கு: உச்சநீதிமன்றம் 15ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வாய்ப்பு
- வக்பு சட்ட திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேறியது.
- ஜனாதிபதி ஒப்புதல் பெற்று சட்டமாக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வக்பு சட்ட திருத்த மசோதா பாராளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சட்டமாக உள்ளது.
இந்த நிலையில் வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பல அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில் வருகிற 15ஆம் தேதி உச்சநீதி மன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.