இந்தியா

ஒடிசா ரெயில் விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

Published On 2023-06-17 03:19 GMT   |   Update On 2023-06-17 03:19 GMT
  • பாலசோர் மாவட்டத்தில் கடந்த 2-ந் தேதி 3 ரெயில் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 289 பேர் பலியாகினர்.
  • பிரகாஷ் ராம் என்ற சிறுவன் ரெயில் விபத்தில் படுகாயம் அடைந்து, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

பாலசோர்:

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கடந்த 2-ந் தேதி 3 ரெயில் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 289 பேர் பலியாகினர். இந்த விபத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

பீகாரை சேர்ந்த பிரகாஷ் ராம் என்ற 17 வயது சிறுவன் இந்த ரெயில் விபத்தில் படுகாயம் அடைந்து, பாலசோர் மாவட்டத்தில் உள்ள மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை தொடர்ந்து பலி 290 ஆக உயர்ந்தது.

Tags:    

Similar News