ரூ. 1.5 கோடி மொத்தமா போச்சு... சுவற்றில் பென்சில் பார்த்த வேலை... வீடு வாங்குறவங்க உஷார்..!
- தனது வீட்டின் விலை மிகவும் அதிகம். ஆனால் கட்டுமானத்தின் தரம் மிகவும் மோசமாக உள்ளது.
- பள்ளிக்குழந்தைகள் பயன்படுத்தும் பென்சிலால் கூட வீட்டு சுவரில் துளைகள் போட முடிகிறது.
பொது மக்கள் தங்கள் கனவு இல்லத்தை கட்டுவதற்காக பல லட்சங்கள் முதல் கோடிகள் வரை செலவழிக்கின்றனர். ஆனால் சில இடங்களில் பணத்தை பெற்றுக்கொண்டு வீட்டின் கட்டுமானத்தை தரமில்லாமல் செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் ரூ.1½ கோடி மதிப்பில் கட்டப்பட்ட வீட்டின் தரம் மோசமாக இருப்பதை காட்டுவதற்காக வீட்டு உரிமையாளர் வீட்டு சுவற்றில் பென்சிலால் ஓட்டை போடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கபீர் என்ற அந்த இளைஞர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோவில், அவர் தனது வீட்டின் விலை மிகவும் அதிகம். ஆனால் கட்டுமானத்தின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. பள்ளிக்குழந்தைகள் பயன்படுத்தும் பென்சிலால் கூட வீட்டு சுவரில் துளைகள் போட முடிகிறது என கூறியவாறு அவர், பென்சிலை வைத்து சுத்தியலால் சுவற்றில் தட்டுகிறார். அப்போது பென்சில் சுவற்றில் துளையிடும் காட்சிகள் உள்ளது. வைரலான இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், வீடு கட்டும் போது கட்டுமான பணிகளை உடனிருந்து கவனிக்க வேண்டும் என்பதை இந்த வீடியோ உணர்த்துவதாக பதிவிட்டனர்.