இந்தியா

மீண்டும் பா.ஜ.க. ஆட்சியா?: சி வோட்டர் வெளியிட்ட கருத்துக் கணிப்பு

Published On 2024-02-08 13:05 GMT   |   Update On 2024-02-08 13:05 GMT
  • தமிழகத்தில் இந்தியா கூட்டணி 39 இடங்களைக் கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.
  • பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 306 தொகுதிகளைப் பெற்று ஆட்சியில் அமரும் என தெரிவித்துள்ளது.

புதுடெல்லி:

இந்தியா டுடே மற்றும் சி வோட்டர் கருத்துக் கணிப்பு நடத்தியது. டிசம்பர் 15 முதல் ஜனவரி 28-ம் தேதி வரை இந்தக் கருத்துக் கணிப்பை நடத்தியது. அதன் விவரம் வருமாறு:

வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என இந்தியா டுடே, சி வோட்டர் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 306 தொகுதிகளைப் பெற்று மீண்டும் ஆட்சியில் அமரும். தமிழகத்தில் இந்தியா கூட்டணி 39 இடங்களைக் கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.


உத்தர பிரதேசத்தில் 72 தொகுதிகளை பா.ஜ.க. கூட்டணியும், 8 தொகுதிகளை இந்தியா கூட்டணி கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.

கேரளாவில் இந்தியா கூட்டணி 20 தொகுதிகளை கைப்பற்றுகிறது.

மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி 26 தொகுதிகளைக் கைப்பற்றுகிறது.

தலைநகர் டெல்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகளையும் பா.ஜ.க. கூட்டணி கைப்பற்றுகிறது.

குஜராத்தில் மொத்தமுள்ள 26 தொகுதிகளையும் பா.ஜ.க. கூட்டணி கைப்பற்றுகிறது.

மேற்கு வங்காளத்தில் இந்தியா கூட்டணி 22 தொகுதிகளையும், பா.ஜ.க. கூட்டணி 19 தொகுதிகளையும் கைப்பற்றுகிறது.

ஜார்கண்டில் 14 தொகுதிகளில் பா.ஜ.க. 12 தொகுதிகளைக் கைப்பற்றுகிறது.

பஞ்சாப்பில் இந்தியா கூட்டணி 10 தொகுதிகளைக் கைப்பற்றுகிறது.

பீகாரில் 40 தொகுதிகளில் பா.ஜ.க. 32 தொகுதிகளைக் கைப்பற்றுகிறது என தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News