இந்தியா
2026 மார்ச் 31க்குள் நாட்டில் நக்சலிசம் நிரந்தரமாக ஒழிக்கப்படும் - அமித் ஷா
- நக்சல் இல்லாத நாட்டை கட்டியெழுப்புவதில் பெரிய அடியை எடுத்து வைத்துள்ளோம்.
- பிரதமர் மோடி அரசு தீவிரவாதிகளுக்கு எதிராக இடைவிடாத முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இந்தியாவில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த மாநிலங்களில் சத்தீஸ்கரும் ஒன்று. இங்கு நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் சிறப்பு அதிரடிப் படைவீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நக்சலைட்டுகளுக்கு எதிரான இந்தத் தேடுதல் நடவடிக்கையின்போது பாதுகாப்புப் படையினர் பல நக்சலைட்டுகளை சுட்டுக்கொலை செய்தனர்.
நக்ஸலைட்டுகள் சுட்டுக்கொல்லப்படுவது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா, "நக்சல் இல்லாத நாட்டை கட்டியெழுப்புவதில் பெரிய அடியை எடுத்து வைத்துள்ளோம். நாட்டில் தீவிரவாதத்தால் பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை 12இல் இருந்து 6 ஆக குறைந்துள்ளது. பிரதமர் மோடி அரசு தீவிரவாதிகளுக்கு எதிராக இடைவிடாத முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. 2026 மார்ச் 31க்குள் நாட்டில் நக்சலிஸம் நிரந்தரமாக ஒழிக்கப்படும்