இந்தியா

சீன உபகரணங்களை இறக்குமதி செய்வதற்காக கட்டுப்பாடுகளை தளர்த்தியது இந்தியா!

Published On 2026-02-19 21:15 IST   |   Update On 2026-02-19 21:15:00 IST
  • உபகரணங்கள் கிடைக்காமல் பெரும் காலதாமதத்தைச் சந்தித்து வந்தன.
  • தடையை தற்போது உற்பத்தித் திறனைக் கருத்தில் கொண்டு அரசு தளர்த்தியுள்ளது.

2020-ஆம் ஆண்டு எல்லையில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, சீன நிறுவனங்கள் மற்றும் தயாரிப்புகள் மீது விதிக்கப்பட்டிருந்த கடுமையான இறக்குமதி கட்டுப்பாடுகளை மத்திய அரசு தற்போது தளத்தியுள்ளது.

சீன உபகரணங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் இந்தியாவின் மின்சாரம் மற்றும் நிலக்கரித் துறை உட்பட முக்கிய துறைகளில் உள்கட்டமைப்புத் திட்டங்கள், உபகரணங்கள் கிடைக்காமல் பெரும் காலதாமதத்தைச் சந்தித்து வந்தன.

இந்தத் தடையை நீக்க வேண்டும் என்று பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன.

இந்நிலையில் கட்டுபாடுகளில் தற்போது மத்திய அரசு அளித்துள்ள தளர்வுகளின்படி, சீனாவிலிருந்து மின் விநியோக மற்றும் நிலக்கரி உற்பத்தி உபகரணங்களை வாங்குவதற்கு பொதுத்துறை நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக சுமார் 750 பில்லியன் டாலர் மதிப்புள்ள அரசு ஒப்பந்தங்களில் சீன நிறுவனங்கள் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

அரசியல் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காகக் கொண்டுவரப்பட்ட இந்தத் தடையை தற்போது உற்பத்தித் திறனைக் கருத்தில் கொண்டு அரசு தளர்த்தியுள்ளது. 

Tags:    

Similar News