அறிந்து கொள்ளுங்கள்

AI துறையில் ரூ.10 லட்சம் கோடி முதலீடு!.. டெல்லி AI மாநாட்டில் அம்பானி அதிரடி அறிவிப்பு

Published On 2026-02-19 19:31 IST   |   Update On 2026-02-19 19:33:00 IST
  • ஒவ்வொரு சாமானிய இந்தியருக்கும் மலிவான விலையில் கிடைக்கச் செய்வோம்.
  • அனைத்து இந்திய மொழிகளிலும் உலகத் தரம் வாய்ந்த ஏஐ திறனை உருவாக்குவதே இலக்கு.

டெல்லியின் பாரத் மண்டபத்தில் ஏஐ உச்சிமாநாடு கடந்த 16 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. நாளையுடன் நிறைவடையும் இந்த மாநாட்டில் இன்று உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் இன்று பங்கேற்ற ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, அடுத்த 7 ஆண்டுகளில் ஏஐ உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

மாநாட்டில் பேசிய அவர், "ஜியோ எப்படி இணையத் சேவையை மலிவாக்கி புரட்சியை ஏற்படுத்தியதோ, அதேபோல் ஏஐ தொழில்நுட்பத்தையும் ஒவ்வொரு சாமானிய இந்தியருக்கும் மலிவான விலையில் கிடைக்கச் செய்வோம்.

இந்தியா இனி வெளிநாடுகளிடம் இருந்து தொழில்நுட்பத்தை வாடகைக்கு எடுக்கத் தேவையில்லை" என்று கூறினார்.

இந்த முதலீட்டின் மூலம் 'ஜியோ இண்டெலிஜென்ஸ்' என்ற பெயரில் முக்கியத் திட்டங்களை ரிலையன்ஸ் செயல்படுத்த உள்ளது:

குஜராத்தின் ஜாம்நகரில் பிரம்மாண்டமான ஏஐ தரவு மையங்கள், நாடு முழுவதும் அதிவேகமான மற்றும் குறைந்த செலவிலான ஏஐ சேவைகளை வழங்க 'எட்ஜ் கம்ப்யூட்டிங்' வசதி ஆகியவை இதில் அடங்கும்.

அனைத்து இந்திய மொழிகளிலும் உலகத் தரம் வாய்ந்த ஏஐ திறனை உருவாக்குவதே தங்களின் இலக்கு என்றும், இதற்காக ஸ்டார்ட்-அப்கள் மற்றும் IIT-களுடன் இணைந்து செயல்பட உள்ளதாகவும் முகேஷ் அம்பானி தெரிவித்தார். 

Tags:    

Similar News