இந்தியா

மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்

மத்திய அரசின் திட்டங்களால் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகி உள்ளன- மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் விளக்கம்

Published On 2022-12-16 02:00 GMT   |   Update On 2022-12-16 02:11 GMT
  • சுயசார்பு இந்தியா திட்டத்தின் மூலம் 60 லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர்.
  • சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வேலை வாய்ப்பை அதிகரிக்க அரசு நடவடிக்கை.

மத்திய அரசின் மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா,ஸ்டாண்ட் அப் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட பல திட்டங்கள் வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருப்பதாக மத்திய பணியாளர் நலத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

பாராளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு எழுத்துப் பூர்வமாக அவர் அளித்த பதிலில், கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வேலை வாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறினார்.

சுயசார்பு இந்தியா வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் 60 லட்சத்து 13 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டம் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கக் கூடியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள், வேலை வாய்ப்பு உருவாக்கத்திற்காக நடைமுறைப்படுத்தப் படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் முத்ரா வங்கிக்கடன் திட்டத்தின் மூலம், இதுவரை 21 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் கடன் உதவி வழங்கப் பட்டுள்ளதாகவும், சாலையோர வியாபாரிகளின் நலனுக்காக பிரதமரின் ஸ்வாநிதித் திட்டம் செயல்படுத்தப் படுவதாகவும் அவர் கூறியுள்ளார். டிசம்பர் மாதம் வரை இந்தத் திட்டத்தின் மூலம் 37 லட்சத்து 95 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளதாகவும் மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News