இந்தியா

எல்லையில் தொடரும் பதற்றம்- இன்று காலை 10.30 மணிக்கு வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்துறை சார்பில் செய்தியாளர் சந்திப்பு

Published On 2025-05-10 08:44 IST   |   Update On 2025-05-10 08:44:00 IST
  • தொடர்ந்து குடியிருப்புகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.
  • எல்லையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில் 3-வது நாளாக பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களை குறி வைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலை இந்தியா முறியடித்தது. மேலும் பாரமுல்லா, ஸ்ரீநகர், அவந்திப்புரா, ஜம்மு உள்பட இந்தியாவின் 26 இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய டிரோன் தாக்குலை வானிலேயே இந்தியா அழித்தது.

தொடர்ந்து குடியிருப்புகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. எல்லையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் எல்லைப்பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில், எல்லை போர் பதற்றம் தொடர்பாக, டெல்லியில் இன்று காலை 10.30 மணிக்கு வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்துறை சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News