இந்தியா

புதிய அரசு அமையும்போது வக்பு திருத்த மசோதா ரத்து செய்யப்படும்- மம்தா பானர்ஜி

Published On 2025-04-04 08:09 IST   |   Update On 2025-04-04 08:09:00 IST
  • நாட்டை பிரிப்பதற்காக வக்பு திருத்த மசோதாவை பா.ஜ.க. கொண்டுவந்து நிறைவேற்றி உள்ளது.
  • பா.ஜ.க. அரசை அகற்றிவிட்டு, புதிய அரசு அமையும்போது இந்த மசோதா ரத்து செய்யப்படும்.

கொல்கத்தா:

மத்திய அரசு கொண்டு வந்த வக்பு திருத்த மசோதா, பாராளுமன்ற மக்களவையில் 12 மணி நேர விவாதத்துக்கு பின்னர் நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டது.

இதனை மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாட்டை பிரிப்பதற்காக வக்பு திருத்த மசோதாவை பா.ஜ.க. கொண்டுவந்து நிறைவேற்றி உள்ளது. மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசை அகற்றிவிட்டு, புதிய அரசு அமையும்போது இந்த மசோதா ரத்து செய்யப்படும். அதற்கான திருத்தத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வருவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News