இந்தியா
நாட்டில் தேசிய உணர்வை ஒளிரச் செய்தவர் மகாகவி பாரதி- பிரதமர் மோடி புகழாரம்
- தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்புகளும் ஒப்பிலாதவை.
- நீதியான, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தை உருவாக்க அவர் பாடுபட்டார்.
இந்தியாவின் கலாச்சாரம், தேசிய உணர்வை ஒளிரச் செய்தவர் மகாகவி பாரதியார் என பிரதமர் மோடி புகழந்துள்ளார்.
மேலும், மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துவதாக பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி மேலும் கூறியதாவது:-
மகாகவி சுப்ரமணிய பாரதியின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது கவிதைகள் துணிவைத் தூண்டின, அவரது சிந்தனைகள் எண்ணற்ற மக்களின் மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருந்தன.
இந்தியாவின் கலாச்சார, தேசிய உணர்வை அவர் ஒளிரச் செய்தார். நீதியான, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தை உருவாக்க அவர் பாடுபட்டார். தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்புகளும் ஒப்பிலாதவை.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.