இந்தியா
கர்நாடகாவில் 6 இடங்களில் லோக் ஆயுக்தா போலீசார் சோதனை
- கர்நாடகாவில் நிர்மிதி கேந்திரா திட்ட இயக்குனர் கங்காதர் ஷிரோ வீடு, அலுவலகத்தில் லோக் ஆயுக்தா சோதனை நடத்தி வருகிறது.
- வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் லோக் ஆயுக்தா சோதனை நடத்துகிறது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் நிர்மிதி கேந்திரா திட்ட இயக்குனர் கங்காதர் ஷிரோ வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவருக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்ளிட்ட 6 இடங்களில் லோக் ஆயுக்தா போலீஸ் சூப்பிரண்டு ஹனுந்தராய தலைமையிலான போலீசார் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.
இந்த சோதனையில் ஏராளமான தங்க நகைகள், வெள்ளி நகைகள், மற்றும் விலை உயர்ந்த வாகனங்கள் மற்றும் சொத்து ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.