இந்தியா

பத்து மணி நேரம்.. விசாரணைக்கு பின் ED அலுவகத்தில் இருந்து கிளம்பிய லாலு பிரசாத் யாதவ்

Published On 2024-01-29 16:23 GMT   |   Update On 2024-01-29 16:23 GMT
  • மிசா பார்தியும் அமலாக்கத்துறை அலுவலகம் வந்தார்.
  • ஆதரவாளர்கள் திரண்டதால் பரபரப்பு.

ரயில்வே துறையில் பணி வழங்க நிலத்தை பெற்ற வழக்கில் முன்னாள் ரயில்வே துறை மந்திரியும், பீகார் முன்னாள் முதலமைச்சரும் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று காலை ஆஜர் ஆனார். லாலு பிரசாத் யாதவ் மூத்த மகளும், எம்.பி.-யுமான மிசா பார்தியும் அமலாக்கத்துறை அலுவலகம் வந்தார்.

சுமார் பத்து மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், லாலு பிரசாத் யாதவ் பாட்னாவில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து கிளம்பி சென்றார். முன்னதாக லாலு பிரசாத் யாதவ் விசாரணைக்கு ஆஜர் ஆவதை அடுத்து அவரது ஆதரவாளர்கள் அலுவலகத்தின் வெளியே திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக, பீகார் மாநில முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமார், நேற்று மாலை பா.ஜ.க. ஆதரவுடன் மீண்டும் முதல் மந்திரியாக பதவியேற்றார். அரசியல் மாற்றம் ஏற்பட்ட நிலையில், லாலு பிரசாத் யாதவ் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News