இந்தியா

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு- பாஜக இடையே ரகசிய கூட்டணி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

Published On 2025-10-20 14:43 IST   |   Update On 2025-10-20 14:43:00 IST
  • பிரதமரின் SHRI திட்டத்தில் இணைய இருப்பதாக கேரள மாநில அமைச்சர் தெரிவித்திருந்தார்.
  • இதன்மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு- பாஜக கூட்டணி வெளிப்பட்டுள்ளது என காங்கிரஸ் குற்றச்சாட்டு.

பிரதமரின் SHRI திட்டத்தில் கேரள மாநில இணைய இருப்பதாக, அம்மாநில அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்திருந்தார். ஆனால், நிலுவையில் உள்ள மத்திய அரசின் நிதியை பெறுவதற்காகத்தான் அந்த திட்டத்தில் இணைகிறோம். கேரளாவில் தற்போது உள்ள கல்விக் கொள்கையில் எந்த மாற்றமும் வராது எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு- பாஜக இடையிலான ரகசிய கூட்டணி, பிரதம்ர் SHRI திட்டத்தின் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது என கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சன்னி ஜோசப் குற்றம்சாட்டியுள்ளார்.

Tags:    

Similar News