இந்தியா

பா.ஜ.க.வில் இணைந்த இந்தியாவின் பணக்கார பெண்மணி

Published On 2024-03-28 11:20 GMT   |   Update On 2024-03-28 11:20 GMT
  • ஓ.பி.ஜிண்டால் குழுமத்தின் தலைவரான சாவித்ரி ஜிண்டால் காங்கிரசில் இருந்து விலகினார்.
  • ஜிண்டால் குழுமம் இரும்பு, மின் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறது.

புதுடெல்லி:

இந்தியாவின் முதல் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால். உலகின் 50-வது மிகப்பெரிய பணக்காரராகவும் அவர் இருக்கிறார்.

ஜிண்டால் குழுமம் இரும்பு, மின் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறது.

அரியானா முன்னாள் மந்திரியும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.ஜிண்டால் குழுமத்தின் தலைவருமான சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வலைதளப் பதிவில், ஹிசார் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக 10 ஆண்டு காலம் இருந்திருக்கிறேன். அரியானா மாநில அமைச்சராக சுயநலமின்றி சேவை செய்திருக்கிறேன். ஹிசார் மக்கள் எனது குடும்பத்தவர்கள். எனது குடும்பத்தின் ஆலோசனையின்பேரில் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், காங்கிரசில் இருந்து விலகிய சாவித்ரி ஜிண்டால் இன்று பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார்.

சமீபத்தில் சாவித்ரி ஜிண்டாலின் மகனும், தொழிலதிபருமான நவீன் ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News