இந்தியா

நாட்டின் கல்வி முறையை நவீனமயமாக்குவதில் அரசு செயல்பட்டு வருகிறது - பிரதமர் மோடி

Published On 2025-04-29 19:36 IST   |   Update On 2025-04-29 19:36:00 IST
  • எதிர்கால தொழில்நுட்பத்தில் இந்தியாவை உலகிலேயே சிறந்ததாக மாற்ற நாம் பாடுபட வேண்டும்.
  • மும்மூர்த்திகள் இந்தியாவின் எதிர்காலத்தை மாற்றும்.

டெல்லியில் நடைபெற்ற ஸ்டார்ட்அப் தொழில் வளர்ச்சி சார்ந்த YUGM மாநாட்டில் பிரதமர் மோடி இன்று கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "இந்தியாவிற்கு AI வேலை செய்ய வைப்பதே எனது அரசாங்கத்தின் குறிக்கோள். எதிர்கால தொழில்நுட்பத்தில் இந்தியாவை உலகிலேயே சிறந்ததாக மாற்ற நாம் பாடுபட வேண்டும்.

21 ஆம் நூற்றாண்டின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நாட்டின் கல்வி முறையை நவீனமயமாக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதற்காகவே அரசு செயல்பட்டு வருகிறது: பிரதமர் மோடி 2013-14 ஆம் ஆண்டில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான மொத்த செலவு ரூ.60,000 கோடி மட்டுமே என்றும், அது இப்போது ரூ.1.25 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

யோசனையிலிருந்து முன்மாதிரிக்கும் தயாரிப்புக்கும் இடையிலான பயணம் மிகக் குறுகிய காலத்தில் முடிக்கப்படுவது மிகவும் முக்கியம். திறமை, மனோபாவம் மற்றும் தொழில்நுட்பம் என்ற மும்மூர்த்திகள் இந்தியாவின் எதிர்காலத்தை மாற்றும்.

இந்தியாவின் பல்கலைக்கழக வளாகங்கள், இளைஞர் சக்தி, புதுமையான கண்டுபிடிப்புகளை இயக்கும் துடிப்பான மையங்களாக உருவாகி வருகின்றன" என்று கூறினார்.

Tags:    

Similar News