இந்தியா

முன்னாள் தளபதி சர்ச்சை: ராணுவத்தினர் புத்தகம் எழுத புதிய கட்டுப்பாடுகள் விதிக்க மத்திய அரசு திட்டம்

Published On 2026-02-13 06:42 IST   |   Update On 2026-02-13 06:42:00 IST
  • கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.
  • ராகுல் காந்தி மக்களவையில் மேற்கோள் காட்டி பேசினார்.

ஜூன் 15, 2020இல் எல்லைப்பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.

முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவணே தனது புத்தகத்தில் கல்வான் தாக்குதலில் மத்திய அரசின் முடிவுகள் குறித்து எழுதிய விஷயங்கள் சர்ச்சை ஆனது.

இன்னும் வெளியிடப்படாத இந்த புத்தகத்தை மேற்கோள் காட்டி எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் பேசியதால் அவையில் பாஜகவினர் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் ராணுவத்தில் பணியாற்றுபவர்கள் மற்றும் ஓய்வுபெற்றவர்கள் புத்தகம் எழுதுவது குறித்து புதிய வழிகாட்டுதல்களை உருவாக்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

புதிய விதிகளின்படி, முப்படைகளைச் சேர்ந்த வீரர்கள் அல்லது அதிகாரிகள் ராணுவம் தொடர்பான புத்தகங்களை எழுதுவதற்கு முன்பாக பாதுகாப்பு அமைச்சகத்திடம் முறையான முன்னனுமதி பெற வேண்டும்.

புதிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் அல்லது அனுமதி பெறாமல் புத்தகம் எழுதினால், அவர்கள் மீது எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்தும் புதிய விதிகளில் வரையறை செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

பாதுகாப்பு அமைச்சகத்தில் இது குறித்த தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த புதிய விதிகள் அமலுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  

Tags:    

Similar News