1966-இல் காணாமல் போன லூனா 9... நாசா புகைப்படங்களை கொண்டு தேடும் ஏஐ..!
- இது நான்கு இதழ்கள் போன்ற அமைப்புகளைக் கொண்டிருந்தது.
- பல தசாப்தங்களாக அதுகுறித்த எந்த தகவலும் வெளியாகாமல் மர்மமாகவே இருந்தது.
லூனா 9 (Luna 9) என்பது நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய உலகின் முதல் விண்கலமாகும். இது சோவியத் ஒன்றியத்தால் (தற்போதைய ரஷியாவால்) ஏவப்பட்டது. இந்த விண்கலம் 1966-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3-ந்தேதி அன்று நிலவின் 'மழைக்கடல்' (Oceanus Procellarum) பகுதியில் மென்மையாகத் தரையிறங்கியது.
நிலவின் மேற்பரப்பில் இருந்து முதன்முதலில் புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியது லூனா 9 விண்கலமே ஆகும். நிலவின் மேற்பரப்பு மிகவும் மென்மையானது அல்ல, அதில் விண்கலங்கள் புதையாமல் நிற்க முடியும் என்பதை நிரூபித்தது.
இது நான்கு இதழ்கள் போன்ற அமைப்புகளைக் கொண்டிருந்தது. இவை விரிந்து விண்கலத்தைச் சமநிலைப்படுத்த உதவின.இந்த விண்கலம் தரையிறங்கிய பின் சுமார் மூன்று நாட்களுக்கு இது பூமியுடன் தொடர்பில் இருந்து தகவல்களை வழங்கியது. அதன்பின்னர் பல தசாப்தங்களாக அதுகுறித்த எந்த தகவலும் வெளியாகாமல் மர்மமாகவே இருந்தது.
இந்த நிலையில், லூனா 9 விண்கலத்தை கண்டுபிடிக்க இங்கிலாந்து மற்றும் ஜப்பானில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஏ.ஐ. தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உள்ளனர்.
நாசாவின் சந்திர மறுமதிப்பீட்டு ஆர்பிட்டர் (LRO) மூலம் சந்திர மேற்பரப்பின் படங்களை ஸ்கேன் செய்ய, அவர்கள் YOLO-ETA (You-Only-Look-Once-Extraterrestrial Artifact) எனப்படும் மேம்பட்ட இயந்திர கற்றல் வழிமுறையைப் பயன்படுத்தினர்.
லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியைச் சேர்ந்த லூயிஸ் பினால்ட் தலைமையிலான குழு, npj விண்வெளி ஆய்வு இதழில் முடிவுகளை வெளியிட்டது. இந்தியாவின் சந்திரயான்-2 ஆர்பிட்டரில் இருந்து புதிய அவதானிப்புகளைப் பயன்படுத்தி அவர்களின் மாதிரியின் கணிப்புகள் விரைவில் சோதிக்கப்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.