இந்தியா

VIDEO: கனமழையில் விளைபொருட்களை காப்பாற்ற போராடிய விவசாயி - போனில் பேசிய அமைச்சர்

Published On 2025-05-19 11:48 IST   |   Update On 2025-05-19 11:48:00 IST
  • கனமழையால் விளைபொருட்களை காப்பாற்ற போராடிய விவசாயியின் வீடியோ வைரலானது.
  • விவசாயியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மத்திய வேளாண்த்துறை அமைச்சர் பேசினார்.

மகாராஷ்டிராவில் மழைநீரில் அடித்து செல்லப்பட்ட விளைபொருட்களை காப்பாற்ற போராடிய விவசாயியின் மனதை உலுக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.

அந்த வீடியோவில், விவசாயி கௌரவ் பன்வார், கனமழையால் தான் கொண்டு வந்திருந்த வேர்கடலைகள் அடித்து செல்லப்படுவதை பார்த்து தனது வெறும் கைகளால் அதை காப்பாற்ற முயற்சிக்கிறார். இந்த வீடியோ நெட்டிசன்கள் இதயத்தை உலுக்கியது.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மத்திய வேளாண்த்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் வீணான விளைபொருட்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என உறுதி அளித்தார்.

விவசாயியுடன் பேசிய வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் அமைச்சர் சிவராஜ் சிங் பகிர்ந்துள்ளார். 

Tags:    

Similar News