இந்தியா
நிலமோசடி வழக்கு - சஞ்சய் ராவத் நாளை ஆஜராக சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை
- சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
- ஜூலை 1-ம் தேதி சஞ்சய் ராவத் ஏற்கனவே அமலாக்கத் துறை முன் ஆஜராகி இருந்தார்.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் குடியிருப்பு வளாகத்தை மாற்றி கட்டித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்துக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் கூடுதல் அவகாசம் கேட்டு சஞ்சய் ராவத் பதில் அனுப்பியிருந்தார். இதனால் ஜூலை 1ம் தேதி ஆஜராக வேண்டும் என மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது.
இதற்கிடையே, மும்பை அமலாக்கத்துறை அலுவலகத்தில் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் ஆஜரானார். அவரிடம் சுமார் 10 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், நில மோசடி வழக்கின் விசாரணைக்கு நாளை நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை சஞ்சய் ராவத்திற்கு மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.