இந்தியா
பீகாரை தொடர்ந்து ஒடிசாவிலும் SIR நடவடிக்கை - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
- ஒடிசாவில் SIR நடவடிக்கை அடுத்த மாதம் தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
- அடுத்தாண்டு ஜனவரி 7ஆம் தேதி வாக்காளர் வரைவு பட்டியல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெறும் பீகாரில் அக்டோபரில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி அங்கு தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை (SIR) மேற்கொண்டது.
அதன்படி 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதற்கு காங்கிரஸ்-ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில், பீகாரை தொடர்ந்து ஒடிசாவில் SIR (special intensive revision) நடவடிக்கை அடுத்த மாதம் தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அடுத்தாண்டு ஜனவரி 7ஆம் தேதி வாக்காளர் வரைவு பட்டியல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவில் 24 வருடங்களுக்கு பிறகு சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்கிறது.