இந்தியா

டெல்லி கார் குண்டு வெடிப்பு: காவல் உயர் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை

Published On 2025-11-10 21:05 IST   |   Update On 2025-11-10 21:05:00 IST
  • NIA அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்
  • 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே காரில் மாலை 6.50 மணியளவில் வெடிப்பு நடந்துள்ளது.

அங்கிருந்த சில வாகனங்கள் இந்த வெடிப்பால் தீப்பிடித்துள்ளன. இந்த குண்டுவெடிப்பில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காவல் உயரதிகாரிகள், NIA அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், செங்கோட்டையில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவம் குறித்து மாநில காவல் உயர் அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார்.

டெல்லியில் உளவுத்துறை தலைமை அதிகாரியுடனும் நிலைமை குறித்து அமித்ஷா கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News