இந்தியா

ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நாளை மறுதினம் அமெரிக்கா பயணம்

Published On 2024-08-21 13:17 IST   |   Update On 2024-08-21 13:19:00 IST
  • பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
  • ஆகஸ்ட் 23 முதல் 26ம் தேதி வரை அமெரிக்காவில் தங்குகிறார்.

புதுடெல்லி:

பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வரும் 23ம் தேதி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அமெரிக்க பாதுகாப்பு மந்திரி லாயிட் ஆஸ்டின் அழைப்பின் பேரில் அங்கு ஆகஸ்ட் 23 முதல் 26ம் தேதி வரை அரசுமுறைப் பயணம் செய்கிறார்.

இந்தப் பயணத்தின்போது ராஜ்நாத் சிங், அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி லாயிட் ஆஸ்டினை சந்திக்க உள்ளார். மேலும், தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமெரிக்க அதிபரின் உதவியாளர் ஜாக் சல்லிவனையும் சந்திக்கிறார்.

ராஜ்நாத் சிங்கின் இந்தப் பயணம் இந்தியா-அமெரிக்கா இடையிலான விரிவான உலகளாவிய பாதுகாப்பு கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினருடனும் அவர் கலந்துரையாடுகிறார்.

Tags:    

Similar News