இந்தியா

பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவு-பிரதமர் மோடி இரங்கல்

Published On 2023-02-04 15:07 GMT   |   Update On 2023-02-04 15:07 GMT
  • பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ஓம் சாந்தி என்று பதிவிட்டுள்ளார்.
  • வாணி ஜெயராம் மறைவு கலையுலகிற்கு பெரும் இழப்பாகும்.

டெல்லி:

பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார்.

டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

திறமையான வாணி ஜெயராம் ஜி, பல்வேறு மொழிகளில் பல்வேறு உணர்வுகளை பிரதிபலிக்கும் அவரது இனிமையான குரல் மற்றும் செழுமையான படைப்புகளுக்காக நினைவுகூரப்படுவார். அவரது மறைவு கலையுலகிற்கு பெரும் இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News