இந்தியா

அமலாக்கத்துறை குற்றப் பத்திரிகையில் கட்சிப் பெயர்: அரசியல் நோக்கம் கொண்டது என சிபிஐ(எம்) சாடல்

Published On 2025-05-26 20:37 IST   |   Update On 2025-05-27 08:47:00 IST
  • மத்திய அமைப்பின் உண்மையான நோக்கத்தை மாநில மக்கள் புரிந்து கொள்வார்கள்.
  • கட்சியின் முக்கிய தலைவர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் என்ற பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுவதற்கான அரசியல் சதி.

கேரள மாநிலம் கருவண்ணூர் கூட்டுறவு வங்கி மோசடி தொடர்பான பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA) வழக்கில் அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் தலைவர்கள் பெயர் இடம் பிடித்துள்ளது.

இந்த நிலையில் கட்சியின் பெயர் குற்றப்பத்திரிகையில் இடம் பிடித்துள்ளது அரசியல் நோக்கம் கொண்டது. இதை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்வோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தெரிவித்துள்ளது.

மேலும், மத்திய அமைப்பின் உண்மையான நோக்கத்தை மாநில மக்கள் புரிந்து கொள்வார்கள். இந்த வழக்கில் கட்சியின் முக்கிய தலைவர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் என்ற பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுவதற்கான வேண்டுமென்றே செய்யப்பட்ட அரசியல் சதி இது எனத் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News