இந்தியா

இமாச்சல் சட்டசபை தேர்தல் - 40 பேர் கொண்ட தேர்தல் பிரச்சார குழுவை அமைத்தது காங்கிரஸ்

Published On 2022-10-22 22:25 IST   |   Update On 2022-10-22 22:25:00 IST
  • இமாச்சல் சட்டசபை தேர்தலுக்காக தேர்தல் பிரச்சார குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது.
  • சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் இந்தப் பட்டியலில் அடங்குவர்.

புதுடெல்லி:

இமாச்சல பிரதேசத்தில் உள்ள 68 சட்டசபை தொகுதிக்கான தேர்தல் நவம்பர் 12ம் தேதி நடைபெறுகிறது. அம்மாநில சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரங்களை காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வினர் தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில், சட்டசபை தேர்தல் பிரச்சாரத்துக்காக 40 பேர் கொண்ட தேர்தல் குழுவுக்கு காங்கிரஸ் கட்சி இன்று ஒப்புதல் அளித்தது.

சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, தற்போதைய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்பட 43 பேர் இந்த குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News