இந்தியா

இது ஒன்றும் அழகிப்போட்டி அல்ல: பிரதமர் வேட்பாளர் கேள்விக்கு சீறிய ஜெய்ராம் ரமேஷ்

Published On 2024-05-22 09:33 GMT   |   Update On 2024-05-22 10:39 GMT
  • 2004-ம் ஆண்டில் மன்மோகன் சிங்கின் பெயர் 4 நாட்களில் அறிவிக்கப்பட்டது.
  • குறுக்கு வழிகளில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றார்.

புதுடெல்லி:

காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இது மனிதர்களுக்கு இடையிலான அழகுப் போட்டி அல்ல. நாங்கள் கட்சி சார்ந்த ஜனநாயகம். எந்தக் கட்சி அல்லது கூட்டணிக்கு அதிகாரம் கிடைக்கும் என்பது கேள்வி.

கட்சிகளுக்கு பெரும்பான்மை கிடைக்கும். கட்சி தனது தலைவரை தேர்ந்தெடுத்து அந்த தலைவர் பிரதமராகிறார்.

2004-ம் ஆண்டில் மன்மோகன் சிங்கின் பெயர் 4 நாட்களில் அறிவிக்கப்பட்டது. இந்த முறை 4 நாட்கள் கூட ஆகாது. 2 நாளில் பிரதமர் பெயர் அறிவிக்கப்படும். எம்.பி.க்கள் கூடி தேர்வு செய்வார்கள். இது ஒரு செயல்முறை.

குறுக்கு வழிகளில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. நாங்கள் திமிர் பிடித்தவர்கள் அல்ல. சில மணி நேரத்தில் பிரதமர் பெயர் அறிவிக்கப்படும். மிகப் பெரிய கட்சியின் வேட்பாளர் பிரதமர். 2004-ம் ஆண்டில் எப்படி நடந்ததோ அப்படியே நடக்கும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News