இந்தியா

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள்

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிப்பதில் சிறப்புக் கவனம்- மத்திய அரசு உறுதி

Published On 2022-07-25 20:31 GMT   |   Update On 2022-07-25 20:31 GMT
  • செயல்திட்டத்தை உருவாக்கி, காலக்கெடுவுக்குள் செயல்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்.
  • பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்ற தொழில்களில் ஈடுபட அரசு உதவி.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கை தொடர்பாக பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு, மத்திய சுற்றுச்சுழல் துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சௌபே, எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கும், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள் 2016-ஐ திறம்பட செயல் படுத்துவதற்கு, 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர் அல்லது நிர்வாகி தலைமையில் சிறப்புப் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேசிய அளவிலான பணிக்குழுவும் அமைச்சகத்தால் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகள், தொடர்புடைய அமைச்சகங்கள், துறைகள் ஒரு விரிவான செயல்திட்டத்தை உருவாக்கி, அதனை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செயல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை உள்ளிட்ட திடக்கழிவு மேலாண்மைக்காக, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு கூடுதலான உதவிகளை வழங்குகிறது. தூய்மை இந்தியா திட்டம் 2.௦ வின் கீழ், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிப்பதில் சிறப்புக் கவனம் செலுத்துகிறது.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பிற பொருட்களை தயாரிப்பதற்கும், மற்ற தொழில்களில் ஈடுபடுவதற்கும் மத்திய அரசு உதவி செய்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News