இந்தியா

மக்கள் விரோத, சந்தர்ப்பவாத பட்ஜெட்... மம்தா பானர்ஜி சாடல்

Published On 2023-02-01 11:34 GMT   |   Update On 2023-02-01 11:35 GMT
  • மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக மம்தா குற்றச்சாட்டு
  • வருமான வரி வரம்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் யாருக்கும் உதவாது.

போல்பூர்:

மத்திய அரசு இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட் குறித்து மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருப்பதாவது:-

இந்த பட்ஜெட் எதிர்கால நன்மையை கருத்தில் கொண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அல்ல, முற்றிலும் சந்தர்ப்பவாதம், மக்கள் விரோதமானது மற்றும் ஏழைகளுக்கு எதிரான பட்ஜெட். ஒரு வகுப்பினருக்கு மட்டுமே இந்த பட்ஜெட் பயனளிக்கும். நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு தீர்வு காண இந்த பட்ஜெட் உதவாது. 2024 மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி வரம்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் யாருக்கும் உதவாது. இந்த பட்ஜெட்டில் நம்பிக்கை தரும் அம்சங்கள் இல்லை. இது ஒரு இருண்ட பட்ஜெட். எனக்கு அரை மணி நேரம் கொடுங்கள், ஏழைகளுக்கான பட்ஜெட்டை எப்படி தயாரிப்பது என்பதை நான் உங்களுக்கு காட்டுகிறேன்.

இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

Tags:    

Similar News