இந்தியா

பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். நாட்டில் வெறுப்புணர்வை தூண்டுகின்றன - ராகுல் காந்தி

Published On 2024-02-11 16:20 GMT   |   Update On 2024-02-11 16:20 GMT
  • இதுபோன்ற எண்ணங்கள் நாட்டின் வலிமையை பலவீனப்படுத்திவிடும்.
  • அன்புடன் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் வாழ்கின்றனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாரத் ஜோடோ யாத்திரையை ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார். இரண்டு நாட்கள் இடைவெளிக்கு பிறகு யாத்திரையில் கலந்து கொண்ட ராகுல் காந்தி ராய்கரில் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "தற்போது நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் வெறுப்பு மற்றும் வன்முறை பரப்பப்படுகிறது. சிலர், மற்றவர்களின் மொழி காரணமாக அவர்களை பிடிக்கவில்லை என்றும், சிலர் அவர்கள் குறிப்பிட்ட மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் பிடிக்கவில்லை என்றும் கூறுகின்றனர். இதுபோன்ற எண்ணங்கள் நாட்டின் வலிமையை பலவீனப்படுத்திவிடும்."

"நம் நாட்டின் டி.என்.ஏ.-வில் அன்பு நிறைந்துள்ள நிலையில், பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். வெறுப்புணர்வை தூண்டுகின்றன. நம் நாட்டில் மக்களுக்கு பல்வேறு நம்பிக்கைகள் உள்ளன, எனினும் அவர்கள் அன்புடன் அமைதியாகவும், ஒற்றுமையாகவும் வாழ்கின்றனர்," என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News