இந்தியா

நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது விபத்து- ஒருவர் பலி

Update: 2023-02-04 16:34 GMT
  • காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
  • மேற்கொண்டு அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம், திட்குமார் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் இன்று வெடிகுண்டு வெடித்தது. இதில் ஒருவர் பலியானார். 2 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திட்குமார் கிராமத்தைச் சேர்ந்த மணிருல் கான் என்பவரது வீட்டில் நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்துக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும், மேலும் அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும் காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

Tags:    

Similar News