இந்தியா

அரியானா வன்முறை: நூஹ் மாவட்டத்தில் 1,208 கட்டிடங்கள் இடித்து தரைமட்டம்

Published On 2023-08-10 15:40 IST   |   Update On 2023-08-10 15:40:00 IST
  • பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
  • காங்கிரஸ் எம்.எல்.ஏ. சவுத்ரி அக்தாத் குற்றம் சாட்டியுள்ளார்.

அரியானாவில் நூஹ் பகுதியில் கடந்த 31-ந் தேதி கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரம் பக்கத்து மாவட்டங்களுக்கும் பரவிய நிலையில் 6 பேர் கொல்லப்பட்டனர்.

80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

வன்முறை தொடர்பாக 57 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் இதுவரை 188 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன.

இதைத்தொடர்ந்து கலவரக்காரர்கள் மற்றும் வன்முறையை துண்டியவர்களுக்கு சொந்தமான கட்டிடங்களை இடிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி நூஹ், நல்ஹர், புன்கானா, டாரு, ஆகோன் உள்ளிட்ட பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு சொந்தமான கட்டிடங்களை இடிக்கும் பணி நடந்து வருகிறது.

நூஹ் மாவட்டத்திற்கு உட்பட்ட 11 நகரங்கள் மற்றும் கிராமங்களில் இதுவரை 1,208 கட்டிடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் குறிப்பிட்ட ஒரு சமூக மக்களை குறி வைத்து அரியானா அரசு கட்டிடங்களை இடிப்பதாக நூஹ் பகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. சவுத்ரி அக்தாத் குற்றம் சாட்டியுள்ளார்.

Tags:    

Similar News