இந்தியா

பள்ளியில் அமோனியா எரிவாயு தொட்டி வெடித்து விபத்து- 9 மாணவர்கள், ஆசிரியருக்கு உடல்நலக்குறைவு

Published On 2023-08-01 13:11 GMT   |   Update On 2023-08-01 13:11 GMT
  • பள்ளியில் 12ம் வகுப்புக்கான வேதியியல் நடைமுறைப் போட்டி நடைபெற்றது.
  • பாதிக்கப்பட்டவர்களுக்கு டாக்கி மருத்துவமனையில் சிகிச்சையில் அளிக்கப்பட்டது.

மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியின் வேதியியல் ஆய்வகத்தில் அமோனியா வாயு தொட்டி வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.

ஹஸ்னாபாத் காவல் நிலையப் பகுதியில் உள்ள டாக்கி எஸ்.எல் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்புக்கான வேதியியல் நடைமுறைப் போட்டி நடைபெற்றது. அப்போது, அமோனியா வாயு டேங்க் வெடித்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வாயுவை சுவாசித்ததால், ஒன்பது மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து, இவர்களை டாக்கி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சில மணி நேரங்களுக்குப் பிறகு அவர்களது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News