ராகுல் காந்தியின் வாக்காளர் உரிமை பேரணியில் பங்கேற்ற அகிலேஷ் யாதவ்
- பீகாரில் ராகுல் காந்தி வாக்காளர் உரிமை பேரணி மேற்கொண்டுள்ளார்.
- சில நாட்களுக்கு முன்பு ராகுல் காந்தியின் பேரணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
பீகாரில் வாக்கு திருட்டுக்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வாக்காளர் உரிமை பேரணி மேற்கொண்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு ராகுல் காந்தியின் பேரணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். தர்பங்காவில் திறந்தவெளி ஜீப்பில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரணியாக சென்றார். பேரணியில் தி.மு.க. எம்.பி. கனிமொழி, பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரும் பங்கேற்றனர்.
இந்நிலையில், இன்று ராகுல் காந்தியின் வாக்காளர் உரிமை பேரணியில் உத்தரபிரதேச எதிர்க்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று பங்கேற்றார்.
இந்த பேரணியில் பேசிய அகிலேஷ் யாதவ், "வாக்காளர் உரிமை பேரணியில்சேர நான் இங்கு வந்துள்ளேன். யாத்திரையை ஆதரித்ததற்காக பீகார் மக்களை நான் வாழ்த்த விரும்புகிறேன். பீகாரின் குரல் நாடு முழுவதும் ஒலிக்கிறது. இந்த முறை பாஜக பீகாரிலிருந்து வெளியேறப் போகிறது" என்று தெரிவித்தார்.