இந்தியா
திருப்பதிக்கு சென்றுவிட்டு திரும்பியபோது விபத்து: கார்- லாரி மோதி 6 பேர் பலி
- உயிரிழந்த 6 பேரும் ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
- விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றன.
ஆந்திரா மாநிலம் அனந்தபுரம் அருகே கார்- லாரி நேருக்கு நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருப்பதி மலைக்கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்த 6 பேரும் ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றன.