இந்தியா

VIRAL VIDEO: 60 நாட்கள் நரக வேதனை.. சிறுமியின் மூக்கில் இருந்து அகற்றப்பட்ட அட்டைப்பூச்சி

Published On 2025-12-29 11:03 IST   |   Update On 2025-12-29 11:03:00 IST
  • பெற்றோர் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
  • சிறுமியின் மூக்கைப் பரிசோதித்த மருத்துவர்கள் உள்ளே ஒரு அட்டை பூச்சி இருப்பதைக் கண்டறிந்தனர்.

ராஜஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி 2 மாதங்களுக்கு முன்பு ஆடு மேய்க்க காட்டிற்குச் சென்றாள். அங்கு, தாகம் எடுத்ததால் கால்வாயில் இருந்து தண்ணீர் குடித்தாள்.

அந்த நேரத்தில், அது எப்படியோ ஒரு சிறிய அட்டைப்பூச்சி தண்ணீரில் இருந்து அவள் மூக்கில் நுழைந்துள்ளது. அது அங்கேயே தங்கி ரத்தத்தை உறிஞ்சி தொடர்ந்து வாழ்ந்தது.

2 மாதங்கள் கடந்துவிட்டன. சிறிய அட்டைப்பூச்சி மிகவும் பெரியதாக மாறியது. இதன் காரணமாக, சிறுமிக்கு சுவாசிக்க கடினமாகிவிட்டது. அவளுடைய மூக்கும் வலிக்க ஆரம்பித்தது.

ரத்தமும் வழிந்து கொண்டிருந்தது. பிரச்சினை நாளுக்கு நாள் மோசமாகி வந்ததால், பெற்றோர் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிறுமியின் மூக்கைப் பரிசோதித்த மருத்துவர்கள் உள்ளே ஒரு அட்டை பூச்சி இருப்பதைக் கண்டறிந்தனர். அவர்கள் மிகவும் சிரமப்பட்டு அதை வெளியே எடுத்தனர். 3 அங்குல நீளம் கொண்டதாக இருந்தது.

அதைப் பார்த்து அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். தற்போது, இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News