இந்தியா

ஊடுருவலை அனுமதிக்காத அரசை தேர்ந்தெடுங்கள்: அசாமில் அமித் ஷா பேச்சு

Published On 2025-12-29 17:59 IST   |   Update On 2025-12-29 17:59:00 IST
  • பா.ஜ.க. அரசு மேலும் 5 ஆண்டுகள் ஆட்சி புரிய அருள் புரியுங்கள்.
  • ஒவ்வொரு ஊடுருவல்காரர்களும் அடையாளம் காணப்பட்டு திருப்பி அனுப்பப்படுவார்கள்.

மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா இன்று அசாமில் 5 ஆயிரம் பேர் இருக்கும் வகையிலான மிகப்பெரிய ஆடிட்டோரியத்தை திறந்து வைத்தார்.

அப்போது அமித் ஷா பேசியதாவது:-

அடுத்த வருடம் மார்ச்- ஏப்ரல் நடைபெறும் தேர்தலில், ஊடுருவலை அனுமிக்காத, அசாம் வளர்ச்சிக்கான பணிக்கான அரசை தேர்ந்தெடுங்கள். அசாமில் கடந்த 10 ஆண்டுகளாக பாஜக அரசின் கீழ் பெரும் முன்னேற்றங்கள் எட்டப்பட்டுள்ளன. பாஜக அரசு மேலும் 5 ஆண்டுகள் ஆட்சி புரிய அருள் புரியுங்கள். ஒவ்வொரு ஊடுருவல்காரர்களும் அடையாளம் காணப்பட்டு திருப்பி அனுப்பப்படுவார்கள்.

வாக்கு வங்கிக்காக, இன்று அசாம் அடையாளத்திற்கு மிரட்டலாக இருக்கும் ஊடுருவலை காங்கிரஸ் ஊக்குவித்தது. மாநிலத்தில் கலாச்சாரம், பொருளாதர மறுமலர்ச்சிக்காக பாஜக தலைமையிலான அரசு தற்போது பணியாற்றி வருகிறது.

இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.

Tags:    

Similar News