செய்திகள்

சாதிவாரி இட ஒதுக்கீட்டை நீக்குவதே ஆர்எஸ்எஸ், பாஜகவின் முக்கிய நோக்கம் - மேவானி கடும் தாக்கு

Published On 2019-01-13 11:24 GMT   |   Update On 2019-01-13 12:07 GMT
மேற்கு வங்காளத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய குஜராத் தலித் தலைவரான ஜிக்னேஷ் மேவானி, சாதிவாரி இட ஒதுக்கீட்டை நீக்குவதே ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க.வின் முக்கிய நோக்கம் என தெரிவித்தார். #10pcreservation #JigneshMewani
கொல்கத்தா:

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கும் பொதுப்பிரிவில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில், மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குஜராத்தை சேர்ந்த சுயேட்சை எம்.எல்.ஏ.வும், தலித் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி கலந்து கொண்டார் அப்போது அவர் பேசியதாவது:



எஸ்.சி - எஸ்.டி மற்றும் ஓபிசி வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை நீக்குவதே ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜகவின் முக்கிய நோக்கம். அதற்கான முதல் படியாகவே பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மாயாவதி, அகிலேஷ் யாதவ் அமைத்துள்ள கூட்டணியை வரவேற்கிறேன். பாஜகவுக்கு எதிராக மாநிலத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டணி அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். #10pcreservation #JigneshMewani
Tags:    

Similar News