செய்திகள்

மும்பை - அந்தேரி இ.எஸ்ஐ மருத்துவமனையில் திடீர் தீவிபத்து - 5 பேர் பலி

Published On 2018-12-17 14:11 GMT   |   Update On 2018-12-17 14:11 GMT
மகாராஷ்டிராவின் அந்தேரியில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #AndheriHospital #HospitalFireAccident
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தின் அந்தேரி பகுதியில் இ.எஸ்.ஐ மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அதில் பலர் உள் மற்றும் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், அந்தேரி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் இன்று மாலை 4 மணியள்வில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, அங்கிருந்த 100க்கு மேற்பட்ட நோயாளிகள் உடனடியாக மீட்கப்பட்டனர். ஆனாலும், இந்த தீவிபத்தில் 5 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.



தகவலறிந்து தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் போராடி தீயை அணைத்தனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர். #AndheriHospital #HospitalFireAccident
Tags:    

Similar News