செய்திகள்

ராமர் கோவில் பிரச்சினையில் கலவரம் ஏற்படுத்த மத்திய அரசு சதி - ராஜ் தாக்கரே குற்றச்சாட்டு

Published On 2018-12-04 20:22 GMT   |   Update On 2018-12-04 20:22 GMT
ராமர் கோவில் பிரச்சினையில் கலவரத்தை ஏற்படுத்த மத்திய அரசு சதி செய்வதாக மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ்தாக்கரே கூறியுள்ளார். #RamTemple #RajThackeray #Riot #BJP
மும்பை:

மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ்தாக்கரே மும்பையில் நடந்த கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியதாவது:-

எனக்கு டெல்லியில் இருந்து ஒரு போன் அழைப்பு வந்தது. அயோத்தி ராமர் கோவில் பிரச்சினையில் கலவரத்தை ஏற்படுத்த மத்திய அரசு சதி செய்வதாக போனில் பேசியவர் என்னிடம் தெரிவித்தார். மஜ்லிஸ் என்ற இஸ்லாமிய கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி துணையுடன் இந்த வன் முறையை ஏற்படுத்த திட்டம் தீட்டப்பட்டு உள்ளது.

இதை நான் சாதாரணமாக எடுத்து கொள்ளவில்லை. மிகவும் தீவிரமான பிரச்சினையாக கருதுகிறேன். அயோத்தியில் ராமர் கோவில் கட்ட கடந்த 4½ ஆண்டு காலத்தில் மத்திய அரசு எந்த ஒரு உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது அவர்களுக்கு மதகலவரத்தை தூண்டுவதை தவிர வேறு வழியில்லை.

ராமர்கோவில் கட்ட நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு கோவில் கட்ட வேண்டும் என்று நான் வலியுறுத்தவில்லை. தேர்தலுக்கு பிறகு கோவில் கட்டுவதில் எந்த பிரச்சினையும் இருக்காது. #RamTemple #RajThackeray #Riot #BJP

Tags:    

Similar News