செய்திகள்

சபரிமலை விவகாரத்தில் தலையிட வேண்டும் - கேரள கவர்னரை சந்தித்து பாஜக எம்பிக்கள் மனு

Published On 2018-12-02 13:12 GMT   |   Update On 2018-12-02 13:12 GMT
சபரிமலை விவகாரத்தில் தலையிட வேண்டும் என கேரள ஆளுநருக்கு அம்மாநில பாஜக எம்பிக்கள் வலியுறுத்தி மனு அளித்துள்ளனர். #SabarimalaiIssue #Sathasivam #BJPMPs
திருவனந்தபுரம்:

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவை தொடர்ந்து, அங்கு பெண்கள் செல்ல முயன்றனர். ஆனால், பக்தர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து, சபரிமலையில் மாநில அரசு கெடுபிடிகளை அதிகரித்துள்ளது. சபரிமலையில் பெண்கள் நுழைவதற்கு போராட்டம் நடத்தியதாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் பாஜக முழு அடைப்பு போராட்டம் நடத்தியது.

மேலும், சமீபத்தில் சபரிமலைக்கு சென்ற மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் எம்.பி கேரள போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கேரளாவை சேர்ந்த பாஜக எம்.பி.,க்கள் அம்மாநில கவர்னர் சதாசிவத்தை அவரது அலுவலகத்தில் இன்று நேரில் சந்தித்தனர். அவர்கள் ஆளுநரிடம் ஒரு மனு அளித்தனர்.

அந்த மனுவில், சபரிமலை விவகாரத்தில் ஆளுநர் உடனடியாக தலையிட வேண்டும். 144 தடை உத்தரவை நீக்க வேண்டும். அங்கு மீண்டும் அமைதி ஏற்பட தாமதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது. 
#SabarimalaiIssue #Sathasivam #BJPMPs
Tags:    

Similar News