செய்திகள்
ம.பி.யில் தேர்தல் பிரச்சாரம்- உஜ்ஜைன் மகா காளீஸ்வரர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தார் ராகுல்
மத்திய பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ராகுல் காந்தி இன்று உஜ்ஜைன் மகா காளீஸ்வரர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தார். #MadhyaPradeshElections #MahakaleshwarTemple #RahulGandhi
உஜ்ஜைன்:
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று உஜ்ஜைன் மற்றும் தாபுவா பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். பிரச்சார பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்க உள்ளார்.
தேர்தல் நெருங்கும் சமயத்தில் பிரதமர் மோடி, மத்திய பிரதேசத்தில் பிரச்சாரம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. #MadhyaPradeshElections #MahakaleshwarTemple #RahulGandhi
மத்திய பிரதேச மாநிலத்தில் வரும் நவம்பர் 28-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 15 ஆண்டுகளாக முதல்-மந்திரி சவுகான் தலைமையில் மத்தியப் பிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சியில் இருந்து வருகிறது. ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், ஆட்சியை பிடிக்க காங்கிரசும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனன.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய பிரதேசத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இன்று காலை உஜ்ஜைன் நகருக்கு வந்த ராகுல் காந்தி, புகழ்பெற்ற மகா காளீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருடன் மாநில காங்கிரஸ் தலைவர் கமல் நாத், ஜோதிராத்தியா சிந்தியா ஆகியோரும் உடன் சென்றனர்.
தேர்தல் நெருங்கும் சமயத்தில் பிரதமர் மோடி, மத்திய பிரதேசத்தில் பிரச்சாரம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. #MadhyaPradeshElections #MahakaleshwarTemple #RahulGandhi