செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - பாதுகாப்பு படையினர் அதிரடி

Published On 2018-10-21 06:33 GMT   |   Update On 2018-10-21 06:33 GMT
ஜம்மு காஷ்மீரில் வீட்டில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையேயான துப்பாக்கிச்சூட்டில் 3 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். #JammuKashmir #MillitantGunnedDown
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் உள்ள லாரூ என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய பாதுகாப்பு படையினர் ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் இருப்பதை கண்டறிந்து சுற்றி வளைத்தனர்.



பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்ததை அறிந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இருதரப்பினருக்குமான இந்த துப்பாக்கிச்சூடு பலமணி நேரங்களாக நீடித்தது.

இந்நிலையில், வீட்டில் பதுங்கி இருந்த 3 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்த தகவலை டிஜிபி தில்பக் சிங் உறுதி செய்துள்ளார். #JammuKashmir #MillitantGunnedDown
Tags:    

Similar News