செய்திகள்
ஜம்மு காஷ்மீர் என்கவுண்டர் - ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் இன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். #JKEncounter #MilitantKilled
ஸ்ரீநகர்:
அப்போது மறைந்திருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை முன்னேற விடாமல் துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். பாதுகாப்பு படை தரப்பில் ஒரு வீரர் உயிரிழந்தார். தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறுகிறது.
பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடங்குவதற்கு முன்பாகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்டர்நெட் சேவைகளை அதிகாரிகள் நிறுத்திவைத்தனர். #JKEncounter #MilitantKilled
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தின் தெற்கு பகுதியில் உள்ள தூரு என்ற இடத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் சிறப்பு படையினரும் அந்த பகுதியை இன்று அதிகாலை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது மறைந்திருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை முன்னேற விடாமல் துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். பாதுகாப்பு படை தரப்பில் ஒரு வீரர் உயிரிழந்தார். தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறுகிறது.
பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடங்குவதற்கு முன்பாகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்டர்நெட் சேவைகளை அதிகாரிகள் நிறுத்திவைத்தனர். #JKEncounter #MilitantKilled