செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் தொடரும் என்கவுண்டர் - 3 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தியது ராணுவம்

Published On 2018-09-15 03:17 GMT   |   Update On 2018-09-15 03:17 GMT
ஜம்மு காஷ்மீரின் குல்காம் பகுதியில் நடைபெற்ற சண்டையில் 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். #JKEncounter #Kulgam
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டம் சவுகாமில் உள்ள ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் இருந்த வீட்டை சுற்றி வளைத்தனர். இதையடுத்து இரு தரப்பினருக்குமிடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.

இரவு முழுவதும் நீடித்த இந்த சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 5 பயங்கரவாதிகள் அந்த வீட்டிற்குள் இருக்கலாம் என தெரியவந்துள்ளதால் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.



தீவிரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டு தாக்குதல் நடைபெற்று வருவதால், பாரமுல்லா-காசிகந்த் பாதையில் ரெயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் ஜம்மு பிராந்தியத்தில் வியாழன் வெள்ளிக்கிழமைகளில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். #JKEncounter #Kulgam

Tags:    

Similar News