செய்திகள்

எல்லையில் சுதந்திர தினத்தை இணைந்து கொண்டாடிய இந்திய - சீன ராணுவ வீரர்கள்

Published On 2018-08-15 10:41 GMT   |   Update On 2018-08-15 10:41 GMT
நாட்டின் 72-வது சுதந்திர தினத்தை ஒட்டி சிக்கிமில் உள்ள நாது லா எல்லையில் இந்தியா மற்றும் சீன ராணுவ வீரர்கள் இணைந்து சுதந்திர தினத்தை கொண்டாடியுள்ளனர். #IndependenceDayIndia
சிக்கிம்:

நாட்டின் 72-வது சுதந்திரம் இன்று நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றி வைத்தார். அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில முதல்வர்கள் கொடி ஏற்றினர்.

இந்நிலையில், சிக்கிம் மாநிலத்தில் உள்ள இந்திய - சீன எல்லையான நாது லா பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் இணைந்து சுதந்திர தினத்தை கொண்டாடியுள்ளனர். அப்போது, இரு நாட்டு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையும் நடந்தது. 
Tags:    

Similar News