செய்திகள்

ரூபாய் நோட்டுகளை சீனாவில் அச்சடிக்க ஒப்பந்தம்? இதுதானா மேக் இன் இந்தியா என காங். கேள்வி

Published On 2018-08-13 15:04 GMT   |   Update On 2018-08-13 15:04 GMT
இந்திய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க சீன அரசு நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், மத்திய அரசை காங்கிரஸ் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது. #IndianCurrency #RBI #China #Congress
புதுடெல்லி:

பட்டுசாலை பொருளாதார திட்டத்தின் கீழ் வெளிநாடுகளின் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணியை சீனாவில் உள்ள அரசு நிறுவனம் தற்போது தொடங்க உள்ளது. சீனாவின் ரூபாயான யுவானை அதிகளவில் அச்சடிப்பதற்காக நாடு முழுவதும் பல புதிய அச்சகங்கள் தொடங்கப்பட்டுள்ளது.

ஹாங்காங்கில் இருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்றில் சீன ரூபாய் நோட்டு அச்சடிப்பு கார்பரேஷனின் தலைவர் லியூ குயிஷெங், “அண்டை நாடுகள் மற்றும் மிக நெருக்கமான நட்புறவில் உள்ள நாடுகளுக்கு ரூபாய் நோட்டு அச்சடிக்க ஒப்பந்தம் செய்துள்ளோம்” என அவர் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியா, வங்காளதேசம், இலங்கை, நேபாளம், தாய்லாந்து, மலேசியா, பிரசில், போலந்து ஆகிய நாடுகளுடன் ரூபாய் நோட்டு அச்சடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார். 

இந்த தகவலை இந்திய ரிசர்வ் வங்கி மறுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், மேற்கண்ட செய்தியை கொண்டு மத்திய அரசை காங்கிரஸ் கட்சி தாக்கியுள்ளது. ‘இந்திய ரூபாய் நோட்டையே வெளிநாட்டில் அச்சடிப்பதுதான் மேக் இன் இந்தியாவா’ என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிராந்திய நாடுகளில் சீனாவின் கரம் வலுவாக இறங்குவதை இந்தியா ஏன் எதிர்க்கவில்லை எனவும் அவர் தனது கேள்வியில் குறிப்பிட்டுள்ளார். 
Tags:    

Similar News