செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் மறைவிடம் அழிப்பு - வெடிபொருள்கள் பறிமுதல்

Published On 2018-08-10 02:00 IST   |   Update On 2018-08-10 02:00:00 IST
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் பதுங்கு குழியை அழித்த ராணுவத்தினர், அங்கிருந்து வெடிபொருள்களை பறிமுதல் செய்துள்ளனர்.#KashmirMilitants
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தின் சாப்ரியன் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அங்கு பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த மறைவிடம் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.

மேலும், அங்கிருந்து வெடிபொருள்கள் மற்றும் ஏகே 56 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்ந்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. #KashmirMilitants
Tags:    

Similar News