செய்திகள்

ஜம்மு காஷ்மீர் - சோபோரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர் வீரமரணம்

Published On 2018-08-03 08:22 GMT   |   Update On 2018-08-03 08:22 GMT
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்துள்ளார். #JammuKashmir #Encounter
ஸ்ரீநகர்:

ஐம்மு காஷ்மீர் மாநிலம் சோபோர் மாவட்டத்தில் துருசு கிராமத்தில் பாதுகாப்பு படையினரை இருப்பிடத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் சிலர் நள்ளிரவில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். 

அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினரும் தாக்குதல் நடத்தினர். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சுட்டு கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இருவரும் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த ரியாஸ் அகமது மற்றும் குர்ஷித் அகமது மாலிக் என தெரிய வந்துள்ளது. இதில் ரியாஸ் அகமது பி.டெக் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்துள்ளார். மேலும், ஒருவர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. #JammuKashmir #Encounter
Tags:    

Similar News