search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sopore encounter"

    ஜம்மு காஷ்மீரின் சோபோர் பகுதியில் பதுங்கியிருந்த 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். #SoporeEncounter
    பாரமுல்லா:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபோர் அருகே உள்ள பிராத் கலன் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த பகுதியை பாதுகாப்பு படையினரும் போலீசாரும் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். அதிகாலை வரை நீடித்த இந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. கொல்லப்பட்ட பயங்கரவாதிகள், லஷ்கர் இ  தொய்பா அமைப்பைச் சேர்ந்த ஓவிஸ் பட், தாகிர் அகமது என்பது தெரியவந்தது.

    இந்த என்கவுண்டர் குறித்து வடக்கு காஷ்மீர் டிஐஜி அதுல் குமார் கோயல் கூறுகையில், “உளவுத்துறை தகவலின் அடிப்படையில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. சரண் அடைவதற்கு வாய்ப்பு வழங்கியதையும் மீறி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். எனவே, நாங்கள் பதிலடி கொடுத்தோம். இதில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்” என்றார். #SoporeEncounter

    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்துள்ளார். #JammuKashmir #Encounter
    ஸ்ரீநகர்:

    ஐம்மு காஷ்மீர் மாநிலம் சோபோர் மாவட்டத்தில் துருசு கிராமத்தில் பாதுகாப்பு படையினரை இருப்பிடத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் சிலர் நள்ளிரவில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். 

    அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினரும் தாக்குதல் நடத்தினர். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    சுட்டு கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இருவரும் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த ரியாஸ் அகமது மற்றும் குர்ஷித் அகமது மாலிக் என தெரிய வந்துள்ளது. இதில் ரியாஸ் அகமது பி.டெக் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்துள்ளார். மேலும், ஒருவர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. #JammuKashmir #Encounter
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். #JammuKashmir #Encounter
    சோப்போர்:

    ஐம்மு காஷ்மீர் மாநிலம் சோப்போர் மாவட்டத்தில் துருசு கிராமத்தில் பாதுகாப்பு படையினரை இருப்பிடத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நள்ளிரவு துப்பாக்கிச்சூடு நடத்தினர். 

    அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். சுமார் 4 மணிநேரமாக நடந்து வந்த இந்த தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேடுதல் வேட்டையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. #JammuKashmir #Encounter
    ×